background img

The New Stuff

குழலோசை-3




( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

11 comments: Leave Your Comments

  1. உன் ஒற்றை
    விரல் ஸ்பரிசம்
    போதும்
    நான் உறங்க'....

    ReplyDelete
  2. உன்னை சுமந்த
    என் உடல்
    இப்போது
    உன் விரல்களை
    சுமக்கிறது
    நேசம் கொண்டு....

    ReplyDelete
  3. வெண்ணிலவில் கட்டில் செய்து,
    விண்மீனை பூக்களாக்கி..
    மேகங்களை மெத்தையாக்கி,
    நான் உறங்க நீ கொடுத்தாய்....

    இவையேதும் தேவையில்லை...
    உன் மடி போதும் என்றேன்....

    புன்னகைத்து எனை
    வாரிக்கொண்டாய்...
    உன் ஒற்றை விரல்
    ஸ்பரிசம் தந்து
    விழிமூட வைத்தாய்....

    ReplyDelete
  4. ஒற்றைப் பெருவிரலை நம்பிக்கையாய்
    பற்றியிருக்கும் அஞ்சு பிஞ்சு விரல்கள்
    ஆதாரமாய் சுற்றிவரும் உலகமாய்
    ஆயிரம் யானையின் பலம் பெறும்
    பற்றுதல் விண்ணுக்கும் மண்ணுக்கும்
    பாலமாய் வாழ்வின் வெளிச்சக் கீற்று
    இன்பமின்னலாய் மழலையின் ஸ்பரிசம்.

    ReplyDelete
  5. பிஞ்சு விரல் பற்றியது பாசத்தை பகிர்ந்துகொள்ள ஸ்பரிசம் மூலம்
    படர்கிறது நேசம்... விரல் இணைப்பின் விந்தையில்
    பாசத்தின் பிணைப்புகளாய்...
    அன்பின் அணுக்காளாய் !

    ReplyDelete
  6. அம்மா..
    உன் பெருவிரல் நுனியில்
    என் எதிர்காலத்தின் தூண்..

    ஒருகால்ச்ச்
    நாளை நான்
    பற்றறுக்கலாம்
    ஒரு போதும் உன்
    பாசத்தை அறுக்க மாட்டேன்..!

    இன்று,
    என் ஐந்து விரல்களை
    உன் ஒரு விரலால் தாங்குகிறாய்..
    நாளை,
    உன் ஒவ்வொரு கனவினையும்
    என் ஐம்புலன்களால் தாங்குவேன்..!!!

    ReplyDelete
  7. கைப்பிடித்து பார்க்கும்போதெல்லாம்
    சொல்லத்தோன்றுகிறது....
    உனது பயணம் நிச்சயம்
    எனது எல்லைகளைக் கடக்கும்!
    சாதனைகளின் விளிம்புகளை
    ஸ்பரிசிக்கும் என்பதில்
    ஐயம்மில்லை.....உனக்கு
    அச்சமில்லை....!

    கா.ந.கல்யாணசுந்தரம்
    www.kavithaivaasal.blogpost.com

    ReplyDelete
  8. -Shenbaga Jagtheesan...October 7, 2011 at 5:05 PM

    கட்டைவிரலை விட்டுவிடு..
    அன்புச் செல்வமே,
    அடுத்த விரலை
    அழுத்திப் பிடித்துக்கொள்..
    அதைத்தான் கறையாக்கி
    அரியணை ஏறப்போகிறார்கள்-
    அரசியலார்....!

    -செண்பக ஜெகதீசன்...

    ReplyDelete
  9. உன் உயிருள் நான் உதித்தேன்.....

    உன்னுள் நான் வாழ்ந்தேன்.........

    உன் அன்பின் ஸ்பரிசங்களில்

    பாதுகாப்பை உணர்கிறேன்.....

    என்றும் உன் -

    தூய உள்ளத்து அன்பை

    உறுதுணையாய்க் கொண்டு

    வலம் வருவேன் உலகினையே-

    வெற்றித் திருமகனாய்!!!
    - பி.தமிழ் முகில்

    ReplyDelete
  10. பிறந்த பொழுதே பற்றும் என் கை
    வாழ் நாள் முழுக்க வழி காட்டியாய்
    திசைகாட்டும் கைபற்றி வலம்வரும்
    தனிமை இல்லை எனக்கு
    எல்லாமுமாய் நீ இருக்கையில்
    உலகமே உன் உருவிலம்மா

    ReplyDelete

  11. உறங்கும் போதும்
    உன் விரல் பற்றும்
    என் கரம்..
    அன்பின் ஸ்பரிசம்

    ReplyDelete

Popular Posts