background img

The New Stuff

குரலோசை - 4

 
 
( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

9 comments: Leave Your Comments

  1. இறகாய் மென்மையாய் மனம்
    சிறந்தால் காற்றில் இதமாய்
    பறந்து நீந்தலாம் இன்பமாய்..
    மாறாய் கடின கல்மனமென்றால்
    சிறப்பிருக்காதே வாழ்வில்!.

    ReplyDelete
  2. என் விரல்கள்
    ஏந்திக் கொள்ளும்
    உன் அன்பின் சிறகை..
    உதிர்ந்து போகும்
    வாழ்வின்
    உதிரா அடையாளமாய்!
    - ரிஷபன்

    ReplyDelete
  3. உன்னில் இருந்து உதிர்ந்தாலும்
    பரவாயில்லை....
    சிறகை விரித்து பறக்கின்றாய் !
    வானம் வசப்படட்டும்
    நான் இந்த கரங்களில்
    இருந்துகொண்டு
    பண்ணிசைக்கிறேன்!

    .....கா.ந.கல்யாணசுந்தரம்.

    ReplyDelete
  4. Iragin menmai
    Ival karangalil..
    Idaiveli kuraihirathu,
    Itho
    Thottidum thoorathilthaan..
    Idhayam padapadakkirathu
    Pattaamboochiyaaha...!

    -Shenbaga jagatheesan...

    ReplyDelete
  5. மென்மையாய்
    மிதந்தபடி
    வாழ்க்கை

    உதறிவிட போவதும்
    ரசனையுடன் போற்றுவதும்

    ஏந்தும்
    உள்ளங்கையையும்,
    ஏங்கும்
    உள்ளங்களையும்
    பொறுத்தே...!

    ReplyDelete
  6. காற்றில் மிதந்து வந்து
    கண் முன் நடனமாடி
    உன் கவனம் கலைக்கிறேன்......
    உள்ளம் துவண்டு விடாது
    முயற்சிக்கத் தூண்டுகிறேன்......
    உன் கைதனில் தஞ்சமடைந்து
    உன் உள்ளம் குதூகலிக்கச் செய்து
    முயற்சியின் அருமையை
    உணர்த்துகிறேன்.........
    மென்மையாய் வருடிச் சொன்னது ........
    மெல்லிறகு ...........

    ReplyDelete
  7. சிலர் வாழ்க்கை வழி முறை
    காற்றில் ஆடும் பஞ்சு போல
    நற் தரை சேர்வதும்
    கிளையில் தங்குவதும்
    காட்டுவழியில் சஞ்சலபடுவதும்
    இறைவன் கட்டிய திசையில்

    நிலாமதி mathinilaa.blogspot.com

    ReplyDelete
  8. காற்றின் கைப்பாவை
    சிறகைப் பிரிந்த
    இறகு !

    ReplyDelete
  9. நினைவலைகளாய்
    சிறகடித்து உன்னை
    வட்டமிட்டுக் கொண்டேயிருப்பேன்
    எப்பொழுதும்

    ReplyDelete

Popular Posts