background img

The New Stuff

குழலோசை-5


( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

7 comments: Leave Your Comments

  1. -Shenbaga jagatheesan...November 19, 2011 at 10:49 PM

    நட்டு வளர்க்கிறான்
    ஒருவன்..
    எரித்துக் கரியாக்குகிறான்
    இன்னொருவன்-
    மனமுடைந்து போகிறது
    மரம்...!

    -செண்பக ஜெகதீசன்...

    ReplyDelete
  2. விதையாய் பூமிதனில்
    விழுந்து-மண்ணை தன்
    வேர்களால் இறுகப் பற்றி
    நிமிர்ந்து நின்று.....
    ஆதவனின் ஒளி கண்டு
    முகம் மலர்ந்து.....
    காற்றின் இசைக்கேற்ப
    தலையசைத்து .......
    பருவத்தே பயனளித்து
    தன் கடனாற்றும்
    உன்னதப் பிறவிகள் - தாவரங்கள்!!!

    ReplyDelete
  3. இன்று நாட்டும் செடி நாளைய விருட்சம்.
    நீ இன்று செய்யும் நற்செயல்கள்
    நாளை உன் சந்ததிக்கு உதவும்
    மரங்களும் ஒரு கண்டு பிடிப்பு போல
    நீ பயன்பெறாவிடாலும்
    சரித்திரம் உன்கதை சொல்லும்

    ReplyDelete
  4. எது என்ன
    நிரந்தர ஜனனமா..??
    இல்லவே இல்லை

    மனிதன் சுயநலக்காரன்..!!
    வெட்டதானே வளக்கிறான்..

    தமிழ்நிலா/0094 750401020

    ReplyDelete
  5. விதைக்குள் இருந்து
    மண்ணை துளைத்து
    கிளைகள் விரித்த
    என்னை
    துளைக்க
    துணிவது
    நியாயமா?

    ReplyDelete
  6. உரம் பெற்று இனி
    வளர்வது
    உன் பாடு...
    களைஎடுத்தே களைத்தேன்
    காத்திருப்பது
    உன் நிழலுக்காய் !

    ReplyDelete

  7. பல உயிர்களைப்
    புதைத்துக் கொண்டுதான்
    தன்னை நாட்டுகின்றன
    உயிர்ச்செடிகள்..!

    ReplyDelete

Popular Posts